அரசியல் கட்சி பிரதிநிதிபோல் ஆளுநர் பேசி வருகிறார் – செல்லூர் ராஜு

தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என செல்லூர் ராஜு பேட்டி.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சி பிரதிநிதி போல் பேசி இருக்கிறார்.
ஆளுநர் அவராக பேசுகிறாரா இல்லை அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்கமுடியாது. ஆளுநர் – ஆளுங்கட்சி மோதலால் மக்கள் திட்டங்கள் பாதிப்பு என தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், செல்லூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025