AdityaL1Launch [File Image]
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11.50 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது, 2,298 கி.மீ உயரத்தில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் தனித்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து கூறிய இஸ்ரோ, ” PSLV-C57 மூலம் ஆதித்யா-எல்1 ஏவுதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகம் சூரியன்-பூமி L1 புள்ளி இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…
டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட்…