இந்திய அணியை அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது.
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை அரையிறுதி ஆட்டத்தில் 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி ஜப்பான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரையிறுதி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் இந்தியாவுக்கு எதிராக ஜப்பான் 6 பெனால்டி கார்னர்களைப் பெற்றது. அதை ஜப்பான் அணி முழுமையாகப் பயன்படுத்தி 2 கோல்கள் அடித்தது. இதையடுத்து, இரண்டாவது காலிறுதியில் இந்தியா சார்பில் தில்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
ஆனால் இதன் பிறகு ஜப்பானுக்கு எதிராக இந்திய அணி வீரர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே இரண்டாவது காலிறுதியின் 14-ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி பெனால்டி கார்னர் வாய்ப்பைப் மேலும் ஒரு கோல் அடித்து முதல் பாதியில் ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் கூட இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஜப்பான் மேலும் 3 கோல்கள் அடித்து போட்டியை ஒருதலைப்பட்சமாக்கியது. கடைசி காலிறுதி ஆட்டத்தின் போது ஜப்பான் அணி இந்தியாவை விட 5-1 என முன்னிலையில் இருந்தது. கடைசி நேரத்தில் இந்தியா 2 கோல்கள் அடிக்க இறுதியாக ஜப்பான் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் முந்தைய போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது. மூன்றாவது-நான்காவது இடத்துக்கு நாளை இந்தியா பாகிஸ்தானுடன் போட்டியிடுகிறது. இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…