AsianGames2023: 50 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் பிரிவில் வெள்ளி வென்று இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் அசத்தல்.!

Published by
செந்தில்குமார்

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இந்த ஆசிய விளையாட்டு போட்டி 6 வது நாளான இன்றும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று 3 நிலை கொண்ட ஆடவர் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய வீரரான தோமர் ஐஸ்வரி பிரதாப் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அதன்படி, 22 வயதான பிரதாப் சிங் 459.7 புள்ளிகள் எடுத்து, 3 நிலை கொண்ட ஆண்கள் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இதனால் ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

இதில் சீனாவின் லின்சு 460.6 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றுள்ளார். அதேபோல சீனாவின் ஜியாமிங் 448.3 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் ஸ்வப்னில் சுரேஷ் 438.9 புள்ளிகளில் நான்காவது இடத்தில உள்ளார். ஆசிய விளையாட்டில் ஐஸ்வரி பிரதாப் சிங், இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப்பதக்கம் அடங்கும்.

இதற்கு முன்னதாக நடந்த 3 நிலை கொண்ட ஆடவர் அணிக்கான 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 1,769 புள்ளிகளுடன் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றது. சீன ஆடவர் அணி 1,763 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இப்போது வரை உலக சாதனையாளராக 1,761 புள்ளிகளுடன் அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 32 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. அதேபோல, சீனா 95 தங்கம், 56 வெள்ளி மற்றும் 28 வெண்கல பதக்கங்களுடன் 179 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. கொரியா 24 தங்கம், 24 வெள்ளி மற்றும் 41 வெண்கல பதக்கங்களுடன் 89 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

19 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

54 minutes ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

2 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

3 hours ago