நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), 4-6, 6-1, 6-1 டேனியல் மெத்வதேவ் வீழ்த்தினர்.
இந்நிலையில், இப்போட்டியின் போது நாற்காலி நடுவரைக் திட்டியதற்காகவும், அவரை ‘சின்னப் பூனை’ என்று அழைத்ததற்காகவும், உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஆஸ்திரேலியாவுக்கு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக $ 8,000 மற்றும் தவறான நடத்தைக்காக $ 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியின் போது சிட்சிபாஸின் தந்தை தனது மகனுக்கு விதிகளை மீறி அறிவுரைகளை வழங்குவதைக் காண முடிந்தது. ஆனால், நடுவரின் அலட்சியத்தால் பொறுமை இழந்த மெத்வதேவ் இடைவேளையின் போது நாற்காலி நடுவரை கோபமாகப் பார்த்து திட்டினார். என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…