சொந்த சாதனையை 20 வருடத்திற்கு பிறகு முறியடித்த ஆஸ்திரேலிய அணி..!

Published by
murugan

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதில் நேற்று  கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் புலம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.  50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் 195 ரன்கள் எடுத்தனர்.196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 26.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய டி20 தொடரில் ஆஸ்திரேலியா 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து 18 ஒருநாள் போட்டி வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்து உள்ளது.
கடந்த 2018 மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதன் பின்னர் பாகிஸ்தான் , நியூசிலாந்து , இங்கிலாந்து , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் விளையாடி தொடர்ந்து 18 ஒருநாள் போட்டி வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனையை படைத்து உள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா மகளிர் அணி 1997 டிசம்பர் 12 முதல் 1999 பிப்ரவரி 7-ம் தேதி வரை தொடர்ந்து 17 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
18- ஆஸ்திரேலியா(2018-19)*
17 – ஆஸ்திரேலியா (1997-99)
16 – ஆஸ்திரேலியா (1999-2000)
16 – இந்தியா (2016-17)
13 – இங்கிலாந்து (1989-91)

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago