இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதில் நேற்று கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் புலம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் 195 ரன்கள் எடுத்தனர்.196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 26.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய டி20 தொடரில் ஆஸ்திரேலியா 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து 18 ஒருநாள் போட்டி வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்து உள்ளது.
கடந்த 2018 மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதன் பின்னர் பாகிஸ்தான் , நியூசிலாந்து , இங்கிலாந்து , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் விளையாடி தொடர்ந்து 18 ஒருநாள் போட்டி வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனையை படைத்து உள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா மகளிர் அணி 1997 டிசம்பர் 12 முதல் 1999 பிப்ரவரி 7-ம் தேதி வரை தொடர்ந்து 17 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
18- ஆஸ்திரேலியா(2018-19)*
17 – ஆஸ்திரேலியா (1997-99)
16 – ஆஸ்திரேலியா (1999-2000)
16 – இந்தியா (2016-17)
13 – இங்கிலாந்து (1989-91)
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…