ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை “புஷ்ஃபயர் பாஷ்” என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கிரிக்கெட் வீராங்கனை சவாலை ஏற்ற சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்யவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த பல நாட்களாக ஏற்பட்ட காட்டுத்தீயினால் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் மெல்போர்னில் நாளை( ஞாயிற்றுக்கிழமை) “புஷ்ஃபயர் பாஷ்” என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் விளையாடவுள்ளனர். இப்போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளர்களாக சச்சின் தெண்டுல்கரும் , ஷேன் வார்னே அணிக்கு பயிற்சியாளர்களாக கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் பங்கேற்க சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர் என குறிப்பிடத்தக்கது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…