சிபிஎல்: 2-வது முறையாகக் கோப்பையை கைப்பற்றிய பார்படோஸ்..!

வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆறு வருடங்களாக சிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது தொடர் சென்ற மாதம் முதல் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதியது.
இறுதி போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் அணியும் , சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜொனாதன் கார்ட்டர் அரை சதம் அடித்த கடைசி வரை களத்தில் நின்றார்.
பின்னர் 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமேசன் வாரியர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பார்படோஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.மேலும் பார்படோஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025