சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம்.
இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியான ஐஎஸ்எல் லீக்கில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எஃப்.சி அணி.சென்னை அணியால் கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முடிவில் கடைசி இடத்தையே பெற முடிந்தது. இந்த வருடம், ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரி நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அணி சரியான பாதையில் செல்வதற்காக இரு தரப்பும் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜான், அணியைச் சிறப்பாக வழிநடத்தி 2-வது ஐஎஸ்எல் பட்டம் வெல்ல உதவினார். ஏஎஃப்சி கோப்பைக்குத் தகுதி பெற்ற முதல் ஐஎஸ்எல் அணி என்கிற பெருமையை அணிக்கு அளித்தார். ஜானின் அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு எங்களுடைய வாழ்த்துகள் என்று சென்னையின் எஃப்.சி அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…