சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கொரோனா பரிசோதனை.. பயிற்சிக்கு சென்னை புறப்படுகிறாரா?

Published by
Surya

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தவகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்த போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐபிஎல் தலைவர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். அந்தவகையில், செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள், நவம்பர் 10 -ம் தேதி அன்று நிறைவுபெறுகிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ பல விதிகளை அறிவித்தது. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 8 அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் 4 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா நெகட்டிவ் என வந்தால் மட்டுமே தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தல தோனிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தால், அவர் பயிற்சிக்கு நாளை சென்னை புறப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

Published by
Surya

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

22 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

30 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

1 hour ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

1 hour ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

14 hours ago