மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக் களம் கண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட்டின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர்.தோனிக்கு சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளது என்று இந்திய அணி மீது விமர்சங்கள் எழுப்பபட்டது.
இந்நிலையில் தான் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தொடரில் அபாரமாக விளையாடி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இது குறித்து தனது யூ டியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி பின் நடந்த இரு போட்டிகளில் அபாரமாக விளையாடி வென்றதுடன் தொடரையும் கைப்பற்றிய விஷயம் எளிதானது அல்ல என்று பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அவர் அதில் பேசுகையில் இந்த தொடர் மூலம் முன்னாள் தோனிக்கு மாற்று வீரரை இந்திய அணி இறுதியாக கண்டறிந்து உள்ளது என்று நான் நினைக்கிறேன். அது வேறு யாரும் இல்லை Manish Pandey தான். மணிஷ் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் போதுமான பந்துகளை எதிர்கொள்ள அவர்க்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்றாலும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் இடத்திற்கு மாற்றாக Manish Pandey இருப்பதை இந்திய அணி உணர்ந்து உள்ளது.
இதே போல Shreyas Iyer ஒரு முழு வீரராக தற்போது உருவெடுத்து வருகிறார். இந்த வீரர்கள் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலிமையாக மாறும் என்று குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் ஐ.பி.எலில் நிறைய விளையாடி உள்ளனர், அதனால் ஆட்டத்தில் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். இதன் மூலம் முக்கியமான போட்டிகளை சிறப்பாக அவர்கள் முடிப்பார்கள் என்று அக்தர் நம்பிக்கை தெரிவித்தார்..
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…