பெங்களூர் அபார வெற்றி.. பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப்.. !

Published by
அகில் R

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியானது தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக தொடக்க விராட் கோலி 92 ரன்களும்,  ரஜத் படிதார் 55 ரன்களும்,  கேமரூன் கிரீன் 46 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டையும், வித்வத் கவேரப்பா  2 விக்கெட் பறித்தனர். 242 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் முதல் ஓவரின் 4-வது பந்திலே விக்கெட்டை இழந்தார். அடுத்து ரிலீ ரோசோவ் களமிறங்க மற்றொரு தொடக்க வீரரான  ஜானி பேர்ஸ்டோவ்  சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி பந்தில் தனது விக்கெட்டை 27 ரன்கள் எடுத்திருந்தபோது பறிகொடுத்தார்.

அடுத்து ஷஷாங்க் சிங் களமிறங்கரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி 27 பந்து 61 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.  அடுத்து வந்த  ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.இருப்பினும் மத்தியில் இறங்கிய கேப்டன் சாம் கரண் 22 ரன்களும், 4-வது விக்கெட்டுக்கு களம் கண்ட ஷஷாங்க் சிங் 37 ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 17 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டையும், ஸ்வப்னில் சிங், லாக்கி பெர்குசன், கர்ன் ஷர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதுவரை பஞ்சாப் அணி 12 போட்டியில் விளையாடிய 4 போட்டியில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

அதே நேரத்தில் பெங்களூர்  அணி  12 போட்டியில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

8 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

8 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

9 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

9 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

12 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago