ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் சென்னை அணி 19 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். ஆனால், கடைசி ஓவர் போட்டியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. காரணம் கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 37 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா முதல் இரண்டு பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்து நோ பால். அதனால் பிரீ ஹிட் வழங்கப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து சிக்ஸர் , சிக்ஸர், 2, பவுண்டரி, சிக்ஸர் விளாசினார் ஜடேஜா.
ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 36 ரன்கள் விளாசிய சென்னை வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் கெயில் ஒரு ஓவரில் 36 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…