#image_title
Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அப்போது, 13.5வது ஓவரில், டேவிட் பந்தை வேகமாக மடக்கி சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸரை மைதானத்தில் போட்டியை ரசித்து கொண்டு இருந்த டெல்லி ரசிகர் ஒருவர் பந்தை பிடிக்க முயற்சி செய்தார்.
ஆனால், அந்த பந்து மிகவும் வேகமாக வந்த காரணத்தால் அவருடைய கைகளில் படாமல் முகத்தில் வேகமாக பட்டு காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து முகத்தில் கர்சீப் வைத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த ரசிகர் மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
மேலும், போட்டியை பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…