kolkata knight riders fan [file image]
சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மே 11-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக 16 ஓவர்கள் வைத்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அப்போது. கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 என்ற இலக்கை எடுத்தது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது சிக்ஸர்களில் ஒன்று ரிங்கு சிங் ஜெர்சி அணிந்து கொண்டு மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கையில் விழுந்தது. பந்து கையில் வந்த குஷியில் அந்த ரசிகர் வேகமாக பந்தை எடுத்துக்கொண்டு மறைக்க முயற்சி செய்தார்.
பந்தை எடுத்து பைக்குள் வைத்து கொண்டு தரவே மாட்டேன் என்று ரசிகர் அடம் பிடிக்க அங்குஇருந்த்து வந்த காவல் அதிகாரி ஒருவர் கோபத்துடன் அதட்டி அந்த பந்தை கொடு என்று கேட்டார். பிறகு அந்த ரசிகரும் பையில் வைத்து இருந்த பந்தை காவல் அதிகாரியிடம் கொடுத்தார். அதனை வாங்கி அவர் மைதானத்திற்குள் வீசினார்.
பந்தை வீசிவிட்டு அந்த ரசிகரை பிடித்து தள்ளிவிட்டு போ போ என்பது போல கூறினார். பந்தை எடுத்து வைத்து விட்டு கொடுக்க அடம் பிடித்த அந்த ரசிகரின் வீடியோவை நெட்டிசன்கள் மோயே மோயே பாடலை வைத்து எடிட் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…