ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி இறுதிவரை போராடிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்து, 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி திகில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ், 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 12 ரன்களை அடித்து, 5,000 ரன்களை கடந்த 2-ம் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிகமான 5,000 ரன்களை கடந்த பட்டியலில் முதலிடத்தில் டேவிட் வார்னரும், இரண்டாம் இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…