இந்த ட்விஸ்ட எதிர்பாத்துருக்க மாடீங்க ..! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை, அப்கான்சிதான் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் சுற்றும், தொடரின் 48-வது போட்டியுமான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில்  விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பெரிதளவு ரன்களை சேர்க்க முடியாவிட்டாலும், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களால் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சேர்த்தது.

எளிய இலக்கு என்ற அலட்சியத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்து கொண்டே இருந்தது. அதன்படி தொடக்க வீரரான ஹெட், வார்னர் மற்றும் மார்ஷ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.

ஒரு முனையில், க்ளென் மேக்ஸ்வெல் மட்டும் ஒரு முனையில் நின்று தனி ஆளாக போராடினார் இருப்பினும் அவரும் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தாண்டி எந்த ஒரு வீரரும் ரன்களை எடுக்கவில்லை.

இதன் காரணமாக படிப்படியாக விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

அட்டகாசமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணியின் குல்புதின் நைப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் சர்வேதச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வலுவான ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருக்கிறது.

கடந்த, 2023ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைய இருந்த நிலையில் மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று வெற்றி பெற செய்திருப்பார்.

அந்த ஒரு வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் அணி தற்போது பழி தீர்த்தது என்றே கூறலாம். மேலும், இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி வாய்ப்பு தற்போது கேள்வி குறியாக மாறியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Published by
அகில் R

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

3 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

4 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

6 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

6 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

7 hours ago