நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில், ஹஸ்ரத்துல்லாஹ் 33 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழக்க, இதனையடுத்து, களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 ரன்களில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். பின்னர், முகமது ஷாஜாத் 45 ரன்களும் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, களம் கண்ட கேப்டன் முகமது நபி 32, அஸ்கர் ஆப்கான் 31 ரன்கள் எடுக்க இறுதியில், 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தனர். நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மேன், லோஃப்டி-ஈடன் தலா 2 விக்கெட்டுகளை பறித்தனர். 161 ரன்கள் இலக்குடன் நமீபியா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிரேக் வில்லியம்ஸ் 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து நிதானமாக விளையாடிய மைக்கேல் வான் 11, ஜான் நிகோல் 14 ரன் எடுக்க பிறகு மத்தியில் இறங்கிய டேவிட் வைஸ் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து, களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற இறுதியாக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியில் ஹமீத் ஹாசன், நவீன்-உல்-ஹக் தலா 3, குல்பாடின் நாப் 2 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…