நெதர்லாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி..!

Published by
murugan

ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34-ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக  வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ டவுட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொங்கிய முதல் ஓவரிலேயே வெஸ்லி பாரேசி 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கொலின் அக்கர்மன் மற்றும் மேக்ஸ் ஓ டவுட் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை மீட்டனர். சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ் ஓ’டவுட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்தபோது 42 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

இதைத்தொடர்ந்து, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த கொலின் அக்கர்மன், ரஷித் கான் ஓவரில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் களமிறங்கிய அனைத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்படி பாஸ் டி லீடே , சாகிப் சுல்பிகர் தலா  3 ரன்னிலும் , லோகன் வான் பீக் 2 ரன்னிலும் , கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் டக் அவுட் ஆனார்கள். இதில் குறிப்பாக கேப்டன் உட்பட 4 பேர் ரன் அவுட்டாகி வெளியேறினார்கள்.

இருப்பினும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் நிதானமாக விளையாடி அரை சதம் பூர்த்தி செய்து 58 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து179 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 3, நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  சுலபமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  இப்ராஹிம் சத்ரான்,  ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ரஹ்மத் ஷா களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த இப்ராஹிம் சத்ரான்,  வான் டெர் மெர்வே வீசிய பந்தில் போல்ட் ஆனார். இதைத்தொடர்ந்து, கேப்டன் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கினர்.

பின்னர் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி  மற்றும் ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில், நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் பூர்த்தி செய்து அடுத்த சில நிமிடங்களில் விக்கெட்டை இழந்தார். நடப்பு உலககோப்பையில் ரஹ்மத் ஷா இதுவரை 3 அரைசதம் அடித்துள்ளார்.

இருப்பினும் மறுபுறம் விளையாடிய கேப்டன் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி 56*  ரன்களுடனும், அஸ்மத்துல்லா உமர்சாய் 31* ரன்களுடன் இருந்தனர்.

நெதர்லாந்து அணியில் சாகிப் சுல்பிகார், வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக் தலா 1 விக்கெட்டை பறித்தனர். ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 3 தோல்வியையும் அடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி  7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும், 5 தோல்வியையும் அடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

29 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

47 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago