Asia Cup 2023 : 4 ஆண்டுகள்.. இந்தியா vs பாகிஸ்தான்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் இன்றைய கிரிக்கெட் போட்டி.!

Published by
மணிகண்டன்

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொண்டு அபார வெற்றியை கைப்பற்றியது இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை வங்கதேசத்தை எதிர்கொண்டு வெற்றி கண்டது.

இதனை தொடர்ந்து 3வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கையில் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் விளையாட உள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்குள் துவங்க உள்ளது.

இறுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த 2019 ஜூன் மாதம் உலகக்கோப்பை தொடரில் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி கண்டு இருந்தது. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகளும், பி பிரிவில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர், அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதி அதில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர்…

5 minutes ago

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…

24 minutes ago

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

2 hours ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

2 hours ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

3 hours ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

3 hours ago