காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.
நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்தார். இந்த கேட்சை பிடித்தபோது காயம் ஏற்பட்டது. காயத்துடன் பென் ஸ்டோக்ஸ் போட்டியில் விளையாடினார்.
பின்னர், போட்டி முடிந்த பிறகு வலி அதிகமானது. இதனால், ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த ஸ்கேனில் கையில் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கைவிரல் முறிவு காரணமாக பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 1 ஓவர் வீசி 12 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும், பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…