காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.
நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்தார். இந்த கேட்சை பிடித்தபோது காயம் ஏற்பட்டது. காயத்துடன் பென் ஸ்டோக்ஸ் போட்டியில் விளையாடினார்.
பின்னர், போட்டி முடிந்த பிறகு வலி அதிகமானது. இதனால், ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த ஸ்கேனில் கையில் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கைவிரல் முறிவு காரணமாக பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 1 ஓவர் வீசி 12 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும், பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…