டி-20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள நிலையில்,ரசிகர்களின் அற்புதமான ட்வீட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளதால் இதுகுறித்து கிண்டலடிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை ட்வீட்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.மேலும்,இவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இரு அணிகளும் கடைசியாக மோதியது எப்போது?
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியன்று நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.இதில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…