பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் நபர்களை குறை கூறுவதற்குப் பதிலாக வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தார். ஜாவேத் மியாண்டட், பாகிஸ்தானின் முன்னாள் மற்றும் பிரபலமான கிரிக்கெட் ஜாம்பவான் என்றே சொல்லலாம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் […]
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், […]
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். நேற்றைய தினம் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் ஆல் அவுட்டாகி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், 242 ரன்கள் […]
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் திணறினாலும், பின்னர் நிலைத்து நின்று […]
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று (பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியின் 5வது போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபகார் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக் களமிறங்கினார். ஃபக்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]
துபாய் : இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து மந்தமாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 32 ஓவர்களில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான். ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்துவீச்சில் பாபர், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து 23(26) ரன்களில் வெளியேறினார். […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்காக ரசிகர்கள் எப்போதும் மிக ஆர்வமாக காத்திருப்பார்கள். ஏற்கனவே, இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. […]
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு பக்கம், இந்திய அணியின் வெற்றிக்காக அனைத்து ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மறுபக்கம் கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஐஐடி பாபா இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். இது, இந்திய […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் தான் இருக்கிறது. இரண்டு அணிகளும் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. எனவே, இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என பேசியுள்ளார். இது குறித்து […]
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளானது ஐசிசி தரவரிசையின் முதல் 8 இடங்களை பிடிக்கும் மனிதர்களுக்கு இடையே இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இது மினி உலக கோப்பை என அழைக்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டு முதல் இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காண போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதியாக […]
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக இந்த போட்டியானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. முன்னதாக நியூஸிலாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான் […]
ஆசிய கோப்பை ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தகுதிபெற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி சரிவர நடைபெற முடியாமல் இருந்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறும் என சோயப் அக்தர் தெரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தான் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வலுவாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியாவுடன் நூலிழையில் தோல்வியடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் கடைசி பந்தில் 1 ரன்னில் ஆட்டத்தை இழந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில்,கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க நிலைமை மோசமானது. அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் அஸ்வின்,1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதற்றமின்றி , அந்த பந்தை “வைடு” என கணித்து ஆடாமல் விட , 1 […]
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை டி 20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ததது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52, இப்திகார் அகமது 51 ரன்களை எடுத்து பாகிஸ்தானின் ரன்னை உயரத்தினர். இந்திய பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.புவனேஷ்வர் குமார், […]
ஆசிய கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது,விராட் கோலி அதிரடியாக விளையாடிய 60 ரன்கள் எடுத்து தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதை காட்டியது. இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் […]
டி-20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள நிலையில்,ரசிகர்களின் அற்புதமான ட்வீட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு […]
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிதானமாக விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் நிறைவு செய்தார். பிறகு சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் அரை […]
இந்தியா -பாகிஸ்தான் இந்த பெயரை கேட்டாலே இந்தியர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது கிரிக்கெட் போட்டி தான்.ஏனென்றால் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா மட்டும் அல்லாது பிற நாட்டில் உள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.அப்படி ஒரு போட்டி தான் இந்தியா -பாகிஸ்தான் போட்டி.இந்த இந்திய அணி வெற்றி பெற்றால் அதை கொண்டாட இந்தியர்கள் தயங்கமாட்டார்கள்.அதேவேளையில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் அதை விமர்சனங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் இந்திய அணியின் வீரர்களின் உருவபொம்மையை எரிப்பது உட்பட பல […]