அஸ்வின் அபாரம்: ஐந்து விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, 233 ரன்கள் எடுத்தது. களத்தில் விருத்திமான் சஹா 9 ரன், அஸ்வின் 15 ரன்களுடனும் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய 93.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 15-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து, ஜோ பர்ன்ஸ் 17-வது ஓவரில் தனது அவுட் ஆனார். இந்த 2 விக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீழ்த்தினார்.

இதையடுத்து ஒருபக்கம் மார்னஸ் லாபுசாக்னே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், மறுபக்கம் அஸ்வின் அபார பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் 1, டிராவிஸ் ஹெட் 7, கேமரூன் கிரீன் 11 ரன்கள் என மளமளவென 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா தவித்து வருகிறது. தற்போது, அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 98 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. மார்னஸ் லாபுசாக்னே மற்றும் கேப்டன் டிம் பெயின் களத்தில் உள்ளனர்.விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago