நியூசிலாந்து பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியா! 244 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!

Published by
murugan

இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது . இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.
 அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உஸ்மான் கவாஜா , ஸ்மித் இவர்களின் கூட்டணியில் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஸ்மித் 5 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 21 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  மத்தியில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி , உஸ்மான் கவாஜா இவர்கள்  இருவரின் கூட்டணியில் அணியின் ரன்களை உயர்த்தினர்.

இவர்களின் நிதானமான ஆட்டத்தால் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர்.பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவருமே  சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 88 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டையும் ,லாக்கி பெர்குசன் ,
ஜேம்ஸ் நீஷம் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர். நியூஸிலாந்து அணி 244 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.
 

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

14 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

14 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago