உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா ஆகிய இரு அணிகளிக்கிடையே பலப்பரீச்சை.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது போட்டியில் இன்று சூப்பர் 12 குரூப் 1-ல் இருக்கும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியா அணி தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுபோன்று, பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் ஸ்ரீலங்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இன்று களமிறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா அணி வீரர்கள்:
குசல் பெரேரா(விக்கெட் கீப்பர்), பத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…