27 வருட சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!

Published by
murugan

உலகக்கோப்பையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிய உள்ளது.நேற்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் கடைசி  லீக் போட்டியை விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் குவித்தது.அதில் இமாம்-உல்-ஹக் 100 , பாபர் ஆசாம்  96 ரன் குவித்தனர்.பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் மூன்று அரைசதம் ,ஒரு சதம் என  474 ரன்கள் குவித்து உள்ளார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

1992-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜவேத் மியான்தத் 437 ரன்கள் குவித்து இருந்தார்.அதுவே உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது  பாபர் ஆசாம் 474 ரன்கள் அடித்து  27 வருட சாதனையை முறியடித்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago