சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி…!

Published by
Edison

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.அதன் முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

இந்நிலையில்,இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற விடுப்பு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.

மேலும்,இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து கிரிக்கெட்டுகளிலிருந்தும் காலவரையின்றி ஓய்வு எடுத்துள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லே கில்ஸ், ஸ்டோக்கிற்கு தனது ஆதரவை வழங்கி,”கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உயிரியல் பாதுகாப்பு குமிழ்களில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சவாலானது” என்று கூறினார்.

இதற்கிடையில்,இலங்கை வீரர் சங்ககரா கூறுகையில்: “பென் ஸ்டோக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான நேரமாக இருக்க வேண்டும். இது எளிதில் எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது.வீரர்கள் இவ்வளவு மட்டுமே சமாளிக்க முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்:

இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச இரண்டிலும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தார்.ஜூலை 2020 இல் உலகின் முதல் தர டெஸ்ட் ஆல்-ரவுண்டராக பென் தரவரிசைப்படுத்தப்பட்டார். மேலும்,அக்டோபர் 25 ஆம் தேதி 2020 அன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 60 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 107* எடுத்தார்.

பென் 71 டெஸ்ட் போட்டிகளில், 10 சதங்கள் மற்றும்  4,631 ரன்களை எடுத்துள்ளார்,மேலும் 163 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.இந்த நிலையில்,அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Edison

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

6 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

6 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

7 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

8 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

8 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

8 hours ago