ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டிற்கான 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் போட்டி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிளேஆஃப் சுற்றுகளும், மே 30-ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறயுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களது சொந்த ஸ்டேடியத்தில் விளையாடாமல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைத்தனத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…