டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இன்றை ஐபிஎல் போட்டி நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதியுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, மகாராஷ்டிரா, புனே உள்ளிட்ட மூன்று நகரங்களில் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய 32வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக டெல்லி அணியில் இரண்டு நிர்வாகிகள் உள்பட ஒரு வீரர் என மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டியிருந்தது. இன்றைக்கு பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. ரேபிட் பரிசோதனையில் தொற்று உறுதியான நிலையில், RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…