ஜிம்பாப்வே நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
34 வயதான முன்னாள் கேப்டனும், பிரபல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரருமான டெய்லர் தனது கடைசி போட்டியை அயர்லாந்துக்கு எதிராக திங்கள்கிழமை விளையாடவுள்ளார். அவர் 2004 இல் சர்வதேச அறிமுகமானார். டெய்லர் 204 ஒருநாள் போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2,320 ரன்கள் எடுத்துள்ளார்.
டெய்லர் தனது பதிவில், “நான் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன், திங்கள்கிழமை (அதாவது இன்று) போட்டி நாட்டிற்கான எனது கடைசி போட்டி. எனது குறிக்கோள் எப்போதுமே அணியை நல்ல நிலையில் விட்டுவிட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன் என தெரிவித்தார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…