கொல்கத்தா அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். சென்னையில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர். 221 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.
ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே சுப்மான் கில் டக் அவுட்டானார். அதன் பின்னர் ராகுல் திரிபாதி களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், மோர்கன் 7 மற்றும் சுனில் நரைன் 4, ராகுல் திரிபாதி 8 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், கொல்கத்தா அணி 31 ரன்னில் 5 விக்கெட்டை கொடுத்தனர்.
பின்னர், மத்தியில் இறங்கிய தினேஷ் கார்த்திக் , ரஸ்ஸல் இருவரும் அதிரடியாக விளையாடினர். ரஸ்ஸல் 21 பந்தில் அரைசதம் விளாசி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் தினேஷ் கார்த்தி 40 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய பாட் கம்மின்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ரன்னில் 51 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.
பாட் கம்மின்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் 65* ரன்கள் எடுத்து இருந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…