தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்தி மிகவும் தவறானது என்று தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்சி .இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் அவர் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆனால் அவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அந்த வேளையில் தோனி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் 20-ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.அந்த அணியில் தோனி பெயர் இடம்பெறவில்லை.இதனால் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியானது.
இன்று அவரது ஓய்வு குறித்து அறிவிப்பார் என்று செய்திகள் அதிக அளவில் வெளியாகிவந்தது.மேலும் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டது பெரும் விவாதமாகியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.இந்தவேளையில் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்தி மிகவும் தவறானது. ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…