கோவை கிங்ஸ் அசத்தல் பந்துவீச்சு..! 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

டிஎன்பிஎல் தொடரில் இன்றைய LKK vs ITT போட்டியில், கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய துஷார் ரஹேஜா பொறுப்பாக விளையாடினார். இருந்தும் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய திருப்பூர் அணியின் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இறுதியில் புவனேஸ்வரன் ஆட்டமிழந்ததும், அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முடிவில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா மட்டுமே 33 ரன்கள் குவித்துள்ளார். கோவை கிங்ஸ் அணியில் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

2 hours ago

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

3 hours ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

7 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

7 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

8 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

8 hours ago