2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த புதிய ஜெர்சியை தல தோனி அறிமுகப்படுத்தினார்.
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஐபிஎல் வரலாற்றில் சோகமான செய்தி என்னவென்றால், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். தங்களின் அணியுடன் இணைந்த வீரர்கள், பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்கள். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த புதிய ஜெர்சியை தல தோனி அறிமுகப்படுத்தினார். ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டுமுதல் சென்னை அணி ஒரே மாதிரியான ஜெர்சியை அணிந்து விளையாடி வந்த நிலையில், முதல் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது.
இந்த ஜெர்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெர்சி, 15 பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் ராணுவ சீருடைக்குரிய நிறம் இந்த ஜெர்சியின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 முறை கோப்பையை கைப்பற்றியதால், ஜெர்சியில் 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…