#CSK vs KKR:சிஎஸ்கே வீரர் டு பிளசிஸ் காலில் ரத்தம்….என்ன நடந்தது?

Published by
Edison

சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இன்று அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.இதில்,டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் பேட்டிங்கில் சற்று தடுமாறினார்.

ஏனெனில்,சென்னை அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே அதற்கு காரணம்.இதனால்,9 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மான் கில்,அணியின் கேப்டன் இயோன் 14 பந்துக்கு 8 ரன்கள் மற்றும் நிதிஷ் ராணா,ஆண்ட்ரே ரசல்,தினேஷ் கார்த்திக் விக்கெட்டை இழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால்,172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இதற்கிடையில்,இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸ் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்தார்.முதலில் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலேயே  கேட்ச் கொடுத்தார். அதை பிடிக்க வேகமாக ஓடி வந்த டு பிளசிஸ்,கேட்ச் வேகமாக தாவி விழுந்து பந்தை மிஸ் செய்தார்.இதில் அவரின் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.மேலும்,விரலிலும் காயம் ஏற்பட்டது.

எனினும், டு பிளசிஸ் தொடர்ந்து விளையாடினார்.இதனையடுத்து,அதோடு அவர் ஹசல்வுட் ஓவரில் இயான் மோர்கன் அடித்த பந்தை சிக்ஸர் லைனல் அருகே சிறப்பாக கேட்சும் பிடித்தார். காலில் காயம் ஏற்பட்ட பின்பும் அவர் ரத்தம் வந்ததை பற்றியும் கவலைப்படாமல் இந்த கடினமான கேட்சை பிடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதற்கு முன்னதாக, மும்பைக்கு எதிரான ஐபிஎல் பைனலில் வாட்சன் இதேபோல்தான் காலில் ரத்தம் வர ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

24 minutes ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

10 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

10 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

11 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

12 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

12 hours ago