#CSK vs KKR:சிஎஸ்கே வீரர் டு பிளசிஸ் காலில் ரத்தம்….என்ன நடந்தது?

Published by
Edison

சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இன்று அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.இதில்,டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் பேட்டிங்கில் சற்று தடுமாறினார்.

ஏனெனில்,சென்னை அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே அதற்கு காரணம்.இதனால்,9 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மான் கில்,அணியின் கேப்டன் இயோன் 14 பந்துக்கு 8 ரன்கள் மற்றும் நிதிஷ் ராணா,ஆண்ட்ரே ரசல்,தினேஷ் கார்த்திக் விக்கெட்டை இழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால்,172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இதற்கிடையில்,இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸ் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்தார்.முதலில் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலேயே  கேட்ச் கொடுத்தார். அதை பிடிக்க வேகமாக ஓடி வந்த டு பிளசிஸ்,கேட்ச் வேகமாக தாவி விழுந்து பந்தை மிஸ் செய்தார்.இதில் அவரின் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.மேலும்,விரலிலும் காயம் ஏற்பட்டது.

எனினும், டு பிளசிஸ் தொடர்ந்து விளையாடினார்.இதனையடுத்து,அதோடு அவர் ஹசல்வுட் ஓவரில் இயான் மோர்கன் அடித்த பந்தை சிக்ஸர் லைனல் அருகே சிறப்பாக கேட்சும் பிடித்தார். காலில் காயம் ஏற்பட்ட பின்பும் அவர் ரத்தம் வந்ததை பற்றியும் கவலைப்படாமல் இந்த கடினமான கேட்சை பிடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதற்கு முன்னதாக, மும்பைக்கு எதிரான ஐபிஎல் பைனலில் வாட்சன் இதேபோல்தான் காலில் ரத்தம் வர ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

10 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago