CSKvsDC: டெல்லி அசத்தல் பந்துவீச்சு..! சென்னை அணி 167 ரன்கள் குவிப்பு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs DC போட்டியில், முதலில் பேட் செய்த சென்னை அணி 167/8 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், கான்வே நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த நிலையில் சிவம் துபே 3 சிக்ஸர்களை விளாசி 12 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். அவருடன் அம்பதி ராயுடு இணைந்து 23 ரன்கள் எடுக்க இருவரும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.

இவர்களையடுத்து, களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி பொறுப்பாக விளையாடி ரன்களை எடுக்க, மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் தங்களது விக்கெட்டை இழந்து களத்தை விட்டு வெளியேறினர். முடிவில், சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 25 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களும், அம்பதி ராயுடு 23 ரன்களும், ரஹானே 21 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago