ஐபிஎல் தொடரில் முதல் குவாலிபையர் போட்டியில் டெல்லி அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். முதல் பந்திலே ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக, டி காக்குடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த டி காக், 40 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார்.
அரைசதம் விளாசிய சூரியகுமார் யாதவ், 51 ரன்களில் வெளியேற, அதன்பின் காமிறங்கிய பொல்லார்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்ப, 13 ரன்களில் க்ருனால் பாண்டியா வெளியேறினார். இறுதியாக மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…