ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் டெல்லி அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீகர் பரத் – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பரத் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து மிட்சேல் மார்ஷ் களமிறங்கினார். இவருடன் டேவிட் வார்னர் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். இந்த கூட்டணி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இதில் அதிரடியாக ஆடிவந்த மார்ஷ் 62 பந்துகளுக்கு 89 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், 13 ரன்கள் அடித்து போட்டியை முடித்தார். இறுதியாக 18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…