விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு.!

Published by
பால முருகன்

கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இந்த மோதலின் தொடர்ச்சியாக சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழும்பின, மேலும் இதன் காரணமாக சீனாவிற்கு சொந்தமான 59 சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

மேலும் சீன நிறுவனங்களை புறக்கணிக்க ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், மேலும் இதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் அவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியிருந்தார். மேலும் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம் என பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் நிர்வாகக் கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகம் சீனாவின் தொலைபேசி நிறுவனமான விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது.

மேலும் இந்நிலையில் இது குறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம் கூறியது அனைத்து ஸ்பான்ஸர்களும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: IPL

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago