ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின, இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி அணி.
இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் அதிரடி ஆட்டத்தால் டெல்லிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.தோனி மற்றும் டு பிளெசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.ரெய்னா 54 ,மொயீன் 36 மற்றும் சாம் கரண் 34 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.ரவீந்திர ஜடேஜா 26 ராயுடு 23 ரன்களை எடுத்திருந்தனர்.
இதன் பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்டி விளையாடி இருவரும் அரை சதத்தை கடந்தனர்.138 ரன் எடுத்திருந்த நிலையில் தான் முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதன் பின் ஷிகர் தவான் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
18.4 ஓவரில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…