மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே ஒரு ரன்னில் குயின்டன் டி கோக் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிவந்த சூரியகுமார் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் எடுக்காமலும், க்ருனல் பாண்டியா 1, பொல்லார்ட் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
கடைசியில் இறங்கிய ஜெயந்த் யாதவ் 23 ரன்னில் வெளியேறினார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர். டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டையும், அவேஷ் கான் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…