சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர்.
160 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 6 ரன்னில் ரன் அவுட்டானார். இதைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். ஜானி பேர்ஸ்டோவ் உடன் கூட்டணி அமைத்த வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார்.
நிதானமாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய விராட் 4, கேதாா் ஜாதவ் 9, அபிஷேக் சா்மா 5, மற்றும் ரஷித் கான் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசி 66* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். கடைசியில் இறங்கிய ஜகதீஷா சுசித் 14* ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 4 போட்டியில் வெற்றியும்,1 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…