இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் அடிக்காமல் வெளியேறினார். பின்னர், சிறிது நேரத்திலே ஷிகர் தவான் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மத்தியில் களம் கண்ட ஸ்டோனிஸ் 53* , பண்ட் 37 ரன்கள் குவித்தனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தனர்.
197 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், இறங்கிய கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி 43 ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய மற்ற வீரர்களும் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…