ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008 ஆம் ஆண்டிலிருந்து தோனி சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்கு தலைமை ஏற்றார் மீண்டும் சென்னைக்கு அனுமதி கிடைத்த போது அதில் இணைந்து கொண்டு மீண்டும் கேப்டனாக விளையாடினர்.
இந்த நிலையில், சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என்று அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த காசி விஸ்வநாதன் ” தோனி முழுதகுதியுடன் இருக்கிறார். அவரை சென்னை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றுமில்லை. தோனி மேலும் இரண்டு ஆண்டு சென்னை அணியில் தொடர்வார்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…