Babar Azam - Rohit sharma [File Image]
இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் நடைபெற உள்ளது. சென்னை, அகமதாபாத், டெல்லி உட்பட 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறும் அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி விழா துவக்க விழா என்பதால் அன்றைய தேதியில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு தேதியை மாற்ற கோரி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதன் பெயரில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு போட்டியை மாற்ற கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல, வேறு சில போட்டிகளும் மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டி அட்டவணையை தயார் செய்தவர்களை முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறுகையில், இந்திய அணி ஒவ்வொரு போட்டி முடிந்தும் வேறு ஒரு இடத்திற்கு தொடர்ந்து அதிக தூரம் பயணித்து கொண்டே இருக்கும் படி யார் அட்டவணையை தயார் செய்தது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…