இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே சற்று தடுமாறிய இங்கிலாந்து அணி, இரண்டாம் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் டொமினிக் சிப்லி வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஜானி பைர்ஸ்டோவும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 17 ரன்களில் வெளியேற, தொடக்கத்தில் களமிறங்கிய சாக் க்ராலி அரைசதம் அடித்தார். 53 ரன்களில் சாக் க்ராலி தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனைதொடர்ந்து இந்திய அணி, பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் அக்சர் படேல், தலா 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதனைதொடர்ந்து அஸ்வின், 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…