2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர்.
2-ஆம் நாள் ஆட்ட பாதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுகளையும், மெயின் அலி ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டொமினிக் சிப்லி, சிராஜ் வீசிய பந்தை ராகுலிடம் கேட்சை கொடுத்து 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ஹசீப் ஹமீது சிராஜிடம் போல்ட் ஆனார்.
பின்னர். கேப்டன் ஜோ ரூட் களமிறங்க ரோரி பர்ன்ஸ் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடிக்காமல் 49 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ஜானி பேர்ஸ்டோ 6, ஜோ ரூட் 48 ரன் எடுத்து உள்ளனர். இந்திய அணியில், சிராஜ் 2, ஷமி 1 விக்கெட்டை பறித்தனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…