#INDvENG: ஜானி சதம்.., இந்திய அணியை வதம் செய்து பழி தீர்த்த இங்கிலாந்து..!

Published by
murugan

இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய் 55 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் உடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 177 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் ஜானி பேர்ஸ்டோவ்வும் 124 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இறுதியாக இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளது.

இந்திய அணியில் கே .எல் ராகுல் 108 , கேப்டன் கோலி 66, ரிஷாப் பண்ட் 77 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

1 hour ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

1 hour ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

2 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

3 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

3 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

4 hours ago