இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2 வது போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் , கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி டான்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இங்கிலாந்து மகளிர் அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டி வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி வர்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…